Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடியை எதிர்த்து களமிறங்கும் கர்ணன்

ஏப்ரல் 10, 2019 06:19

புதுடில்லி: லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடியை எதிர்த்து, வாரணாசி தொகுதி யில், கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, கர்ணன், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, கொல்கத்தா  உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான, கர்ணன், வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். 

உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த போதே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர், கர்ணன். கடந்த ஆண்டு, 'ஊழலுக்கு எதிரான கட்சி' என்ற, புதிய கட்சியை துவங்கினார். அரசு நிர்வாகத்திலும், நீதித்துறையிலும் உள்ள முறைகேடுகளை அம்பலப்படுத்துவதே தன் நோக்கம் என, அவர் தெரிவித்திருந்தார். 

ஏற்கனவே, மத்திய சென்னை லோக்சபா தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நீதிபதி கர்ணன், தற்போது, வாரணாசி தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.  
 

தலைப்புச்செய்திகள்